Friday, 15 February 2013

தலைமை தெய்வம் அய்யனார்
                 
                 தமிழகத்தின் காவல் தெய்வங்கள் என்றாலே முதலில் நாம் அனைவரின் நினைவுக்கு வருவது அய்யனார் தான் இருக்கும் இடம் எங்கும் தலைமை தெய்வமாகவும் முதைன்மைதெய்வமாகவும் அருளும் அய்யனாரின் வரலாறு. தமிழகத்தில்  அய்யனார் ஆதியில்  அமர்ந்த  இடமாக  கருதப்படுவது நெல்லை மாவட்டத்தின்  பாபநாசத்தில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் இதுவே அய்யனாரின் ஆதி பிறப்பிடமாக கருதப்படுகிறது

அய்யனார் இருக்கும் இடம் யாவும் தலைமை ஏற்று இருக்கிறார் அய்யனாரின் தலைமை காவல்  தெய்வமாக(தளபதியாக) கருப்பசாமி அருள் புரிகிறார்

சில இடங்களில் அவர் தலைமை வகிக்கவில்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் தலைமையேற்று இருகின்றனர் அல்லது அய்யனார் தலைமை இல்லாததுக்கு வேறு ஏதேனும் கதை இருக்கிறது அல்லது முதல் பூஜை அய்யனாருக்கு செய்கிறார்கள்

அய்யானாரை  சில  இடங்களில் சாஸ்தா வாகவும் வழிபடுகிறார்கள்

பொதுவாக  அய்யனாருக்கு பலி கொடுப்பது கிடையாது ஆனால் சில கோவில்களில் பலி கொடுக்கிறர்கள் ஆனால் தை அய்யனாரின் பரிவார தெய்வங்கள்  எற்றுக்கொள்வதாக  ஐதீகம்

No comments:

Post a Comment