Saturday, 16 February 2013

3,கிழக்கு நோக்கி
 
                        பொதுவாக அய்யனார் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்திருப்பார். மார்பில் பூணூல் அணிந்திருப்பார். இளைஞரைப்போன்றவர். கீரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார், மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். வலக்கையில் சாட்டை அல்லது மலர்ச்செண்டு வைத்திருப்பார் சில இடங்களில் அபூர்வமாக வலக்கையில் அபயமுத்திரையுடன் அருள்பாலிக்கிறார் வைத்திருப்பார். இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார். சில இடங்களில் குதிரை மீதோ யானை மீதோ அமர்ந்திருப்பார்.

1 comment:

  1. யானை மீது அமர்ந்துள்ள அய்யனார் யார் எந்த ஊர்களில்உள்ளது?

    ReplyDelete